இல்லத்தரசிகளுக்கு ரூ.5,000 – கழகத் தலைவர் அறிவிப்பு: நா. கார்த்திக் வரவேற்பு
- Dhanasekar Shanmugham

- 6 days ago
- 1 min read
சென்னை:தமிழகத்தில் பி.ஜி (PG) கோடி இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் தொகை, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு முன்பணமாக ரூ.3,000 மற்றும் கூடுதலாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் M. K. Stalin அவர்களுக்கு பல தரப்பிலிருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
பெண்கள் நலனில் முக்கிய முன்னேற்றம்
இல்லத்தரசிகள் குடும்பத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். அவர்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிதி உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பச் செலவுகளை சமாளிக்கவும், குழந்தைகளின் கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவும் இந்தத் தொகை பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
நா. கார்த்திக் வரவேற்பு
இந்தத் திட்டத்தை வரவேற்று, நா. கார்த்திக் Ex.MLA., அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக உயர்த்தும் இந்த அறிவிப்பு சமூக நீதி நோக்கில் எடுத்த மிகப் பெரிய முடிவாகும். இல்லத்தரசிகளின் உழைப்பை மதிக்கும் அரசின் செயல் இது,”என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலம் முழுவதும் பெண்களின் பொருளாதார சுயநிலையை மேம்படுத்த அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வட்டாரங்களில் எதிர்பார்ப்பு
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதும், பல ஆயிரம் குடும்பங்களுக்கு நேரடி பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இந்த நடவடிக்கை, சமூக மாற்றத்திற்கான முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.
—தனசேகர் சண்முகம்

Comments