Na Karthik DMK

நா. கார்த்திக்
திமுக மாநிலத் தீர்மானக் குழுச் செயலாளர்
கொள்கைகள் மற்றும் சாதனைகள்
பேரறிஞர் அண்ணா வகுத்த குறிக்கோளுக்கு ஏற்பத் தமிழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய நான்கு மொழி வழி மாநிலங்களிலும் இந்திய அரசுரிமை ஒருமைத்தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டு நெருங்கிய திராவிட பண்பாட்டுக் கூட்டுறவு நிலவப் பாடுபடுவது; அரசியல் நிர்ணயச் சட்டத்தில் முழு நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டு சமதர்மம், சமயச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய லட்சியங்களில் முழு ஈடுபாடும், பற்றும் கொண்டு இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கட்டிக் காப்பது என்பது தி.மு.கழகத்தின் குறிக்கோள் ஆகும்.
கழகத்தின் கோட்பாடு:
பேரறிஞர் அண்ணா அறிவுறுத்திய கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப் பணி ஆற்றிடவும்; பொருளாதாரத் துறையில் வறுமையை வென்று, சமதர்ம அடிப்படையில் எல்லோரும் நல்வாழ்வு பெற வழிவகை கண்டிடவும்; பிறமொழி ஆதிக்கத்திற்கு இடங்கொடாமல் அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும் அவற்றுக்கான உரிய இடத்தைப் பெற்றுத் தரவும்; மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, மாநிலங்களில் சுயாட்சியும் – ஒன்றிய கூட்டாட்சியும் உருவாகிடவும் தொண்டாற்றுவது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடு.
01
சட்டமன்றப் பணி (2016-2021)
2016-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியிலிருந்து திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அப்பகுதி மக்களின் கோரிக்கைகளைச் சட்டமன்றத்தில் வலுவாக ஒலித்தார்.
02
மக்கள் நலப் போராட்டங்கள்
அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவையில் நிலவிய குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதி மற்றும் தூய்மைப் பணிகளில் நிலவிய தொய்வு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்தினார்.
03
அரசு திட்டங்களைச் செயல்படுத்துதல்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோவை மாவட்டத்தில் தமிழக அரசின் திட்டங்களான "மக்களுட ன் முதல்வர்" மற்றும் "நமக்கு நாமே திட்டம்" ஆகியவற்றின் கீழ் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்களைத் திறப்பது போன்ற பணிகளில் மாவட்டச் செயலாளராக ஒருங்கிணைந்து செயல்பட்டார்.
04
கட்சி அமைப்பு வலுப்படுத்துதல்
கோவை மாநகர் மாவட்ட த்தில் நீண்ட காலம் மாவட்டச் செயலாளராக இருந்து, பூத் கமிட்டி அமைப்பது மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் (இல்லந்தோறும் இளைஞர் அணி) மூலம் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தினார்
05
குடியிருப்பு வசதிகள்
சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகிலுள்ள பழுதடைந்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளை இட ித்துவிட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான ஆலோசனைகள் மற்றும் முயற்சிகளில் பொதுமக்களுடன் இணைந்து செயல்பட்டார்.

உங்கள் கார்த்திக்

அறிமுகம்:
நா. கார்த்திக் அவர்கள் கோயம்புத்தூரைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர் மற்றும் திமுக கட்சியின் செயலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர். சமூகநீதி, சமத்துவம் மற்றும் மக்கள் முன்னேற்றம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தனது அரசியல் பயணத்தை அமைத்துள்ளார். பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு, தீர்வுகளுக்காக உறுதியுடன் செயல்படும் மக்கள் நாயகனாக அறியப்படுகிறார்.
அரசியல் பொறுப்புகள்:
-
செயலாளர், திமுகழக தீர்மானக்குழு
-
முன்னாள் மாவட்ட செயலாளர், கோவை மாநகர் மாவட்ட திமுக
-
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சிங்காநல்லூர் தொகுதி
-
முன்னாள் துணை மேயர், கோவை மாநகராட்சி (2006–2011)
அரசியல் பயணம்:
அவர் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக (MLA) பணியாற்றியவர். சட்டமன்றத்தில் மக்கள் சார்ந்த பிரச்சினைகளை வலியுறுத்தி, நகர மற்றும் தொகுதி வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்தார்.
மாவட்ட அளவில் கட்சி அமைப்பை வலுப்படுத்துதல், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள், தேர்தல் திட்டமிடல் மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
கல்வி, சாலை வசதி, குடிநீர் திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள் போன்ற துறைகளில் பொதுமக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
என்றும் திராவிட மாடல் வழியில் நான், நீங்களும் என்னுடன் இணையுங்கள்
முன்னுரை
கோயம்புத்தூர் (Kovai) தமிழ்நாட்டின் தொழில், கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சியின் மையமாக திகழ்கிறது. 2026 முதல் 2030 வரை, கோயம்புத்தூரை தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் தரமான வாழ்க்கை ஆகியவற்றில் முன்னோடி நகரமாக மாற்றுவது என் நோக்கம்.
1. சாலை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு
-
உலகத் தரத்திலான சாலை அமைப்பு
-
சுய இயக்க வாகனங்களுக்கு (Self-driving cars) ஏற்ற ஸ்மார்ட் சிக்னல் அமைப்பு
-
மேம்பாலங்கள் மற்றும் ரிங் ரோடு திட்டங்கள்
-
நடைபாதை மற்றும் சைக்கிள் பாதைகள் விரிவாக்கம்
2. பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
-
100% சோலார் மின்சார பயன்பாடு அரசு கட்டிடங்களில்
-
நகரமெங்கும் மரக்கன்றுகள் நடுதல்
-
கழிவுகளை முழுமையாக மறுசுழற்சி செய்யும் திட்டம்
-
நீர்நிலைகள் சுத்தம் மற்றும் பாதுகாப்பு
3. தொழில் & வேலைவாய்ப்பு வளர்ச்சி
-
IT & Start-up ஹப் உருவாக்கம்
-
இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மையங்கள்